Thursday, December 30, 2010

சீனா வில் ஸ்கைப் (Skype) தடை செய்யப்பட்டது

சீனா பல இணைய தளங்களை தடை செய்திருப்பது தெரிந்த செய்தி தான். அனால் இப்போ "ஸ்கைப்" தடை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம்" இதை தவிர வேறு யாரும் இனிமேல் சீனா வில் தொலை தொடர்பு சேவை தர முடியாதபடி சட்டம் போட்டுள்ளனர்

Tuesday, December 28, 2010

என்ஜாய் (NJOY) - யூத் மீட்

எங்க ஊர்ல (தருமபுரி, தமிழ் நாடு) வருசா வருஷம் ஒரு யூத் மீட் நடக்குது. காலைல 10 மணில இருந்து சாயங்காலம் 5 மனு வரைக்கும் நடக்கும். இதுக்கு அப்புறம் 6-9 ஒரு மியூசிக் கான்செர்ட் நடக்கும்.

இப்போ அடுத்த ஜனவரி 29 ல நடக்க போகுது. அதோட விளம்பரம்.......



இது 2008 ல நடந்த பொது எடுத்த சில போட்டோ


















































2010 ல நடந்த மீட் நோட்டீஸ்.





2011 PRAYER CARD:

Wednesday, December 22, 2010

தப்பா?

ஒருத்தன் Rs.200 வச்சி இருக்கான், அவன் அத 4 பேருக்கு Rs.100 னு பிரிச்சி குடுக்கறான்.

கணக்கு சரியா? இல்ல தப்பா?
















கணக்கு சரி தான். ஏன்னா.....

நாலு பேருக்கு நல்லது நடக்குது னா எதுவுமே தப்பு இல்ல......

Thursday, December 16, 2010

காலைல கடி போடுதுபா.....

காலைல எழுந்து, குளிச்சுட்டு(நிஜமாதம்பா), இங்க ஆபீஸ் கு வந்தா... வேலைய செய்யாம, ப்ளாக் எடுத்து பாத்துகிட்டு, என்ன பொழப்போ னு யோசிசிட்டே இப்டி எழுதிக்கிட்டு இருக்கேன்....

கொடுமைடா சாமி....

Tuesday, December 14, 2010

கணக்கு போடுவது எப்பிடி....

இது கொஞ்சம் இண்டரஸ்ட்டிங் டாபிக் தான்... ஒரு புக் ல படிச்சேன்

பெருக்கல் கணக்கு போடறது எப்படி...

ஒரு எடுத்து கட்டுக்கு 95 X 96 = ?


95 X 96

இப்போ 100 எடுத்துக்கலாம்.
95 - 100 = -5
96 - 100 = -4

அதனால

-----------
95 X 96
-5 -4
-----------

இப்போ, மூலைவிட்டதுல கூட்டணும்.

95 + (-4) = 91 (or)
96 + (-5) = 91.

இப்போ,

-5 X -4 = 20

கடைசியா விடை......
9120


கூட்டி கழிச்சு பாருங்க... விடை கரெக்டா வரும்.....

வீட்டருகே வந்த பாம்பு......

மும்பை ல வீட்டுக்கு பக்கத்துலையே ஒரு பாம்பு வந்துடுச்சு. அப்புறம் பாம்பு புடிக்கற ஆளு வந்து அத புடிச்சிட்டு போனார்....






ரயிலில் பார்த்த மயில்.......

நான் போன மாசம் மும்பை போகும் போது ரெண்டு மயில் குட்டி மாதிரி குழந்தை கலை பார்த்தேன்... அப்டியே mobile ல அள்ளிட்டு வந்துட்டேன்.....



Billy Day தருமபுரியில்......

பில்லி தர்மபுரிக்கு போன அக்டோபர் மாசம் 10 ஆம் தேதி வந்தார். அவர் ETZC இல பாடிய பாடல் "you tube"ல upload செஞ்சு இருக்கேன்... குவாலிட்டி கொஞ்சம் கம்மி தான்... அட்ஜஸ்ட் பண்ணி கோங்க.........



Friday, August 6, 2010

நன்றி -4 ஆல்வின் தாமஸ் தடுமாறும் கால்களை கண்டேன் - பாடல் வரி

தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2

பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை - 2
எனை யோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2

எனக்காக பாடுகள் பட்டீரே
எனக்காக நொருக்கப் பட்டீரே ஆண்டவரே
என் மேல் விழ இருந்த ஆக்கினைகள்
உங்க மேல விழுந்திச்சேப்பா
இயேசப்பா இயேசுவே
எனக்காக இரத்தம் சிந்தினீரோ

குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை
மரணம் நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை - 2
எனையோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2

Friday, April 30, 2010

திருக்குறளுக்கு விளக்கம் தேவையில்லை: இளையராஜா

சென்னை, ஏப். 25: திருக்குறளைப் படிக்கும் போதே பொருள் புரிகிறது அதற்கு தனியாக விளக்கம் தேவையில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.


சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கானசபாவில் ஞாயிற்றுக்கிழமை, கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள குறள் தரும் பொருள் இசை சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியது:÷2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.


1929-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது "நான் உங்கள் வீட்டு பிள்ளை' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், "ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர் என்றார்.


நடிகர் விவேக்: "திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்தும் உருகார்' என்பர். அந்தத் திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் சேர்த்தவர் இளையராஜா அந்த வகையில் குறள் தரும் பொருளும் வெற்றி பெறும். 133 அதிகாரத்தில் உலகை அடக்கியவர் திருவள்ளுவர் ஆகையால் தான் சமயம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரம் வீடியோ கேம், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று மாறிவிட்டதால், ஒரு குறளையாவது டைப் செய்தால் தான் அவை இயங்கும் என்ற நிலை வந்தால் எளிதில் திருக்குறள் அவர்களை சென்றடையும் என்றார்.


நடிகர் எஸ்.வி.சேகர்: இசைக்கு மொழி பேதம் கிடையாது. தெலுங்கு மொழியே தெரியாவர்கள் கூட கீர்த்தனைகளை பாடுகிறார்கள், கேட்கிறார்கள். இசை என்பது மொழிக்கு அப்பாற்பட்டது. கலை என்பது அரசியலை தாண்டிய விஷயம் என்றார்.


கவிஞர் பூவை செங்குட்டுவன்: திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளை படித்து மு.வ. சாரங்களை வைத்துக் கொண்டு 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது என்றார். இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், நடிகர் உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

THANKS : Mail from SSiva

வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்.

வேலை வழங்கும் விதவிதமான துறைகள்: வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ்_2 முடித்த மாணவர்கள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானதுதானா? என தகுந்த கல்வியாளர் களிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.

வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்.
1. விண்வெளி பொறியியல் 2. வங்கி மற்றும் காப்பீடு 3. பயோ டெக்னாலஜி 4. பி-_பார்ம் 5. பி.பி.ஓ இண்டஸ்ட்ரி 6. கணினி மற்றும் மென்பொருள் 7. நிகழ்ச்சி மேலாண்மை 8. பேசன் மேனேஜ்மென்ட் 9. மனித உரிமைகள் 10. விருந்தோம்பல் மேலாண்மை 11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் 12. தகவல்துறைத் தொழில்நுட்பம் 13. தொழிற்ச்சாலை உறவுகள் 14. பன்னாட்டு வாணிபம் 15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் 16. ஊடகம் மற்றும் இதழியல் 17. பொருள் மேலாண்மை 18. உற்பத்தி மேலாண்மை 19. பணியாளர் மேலாண்மை 20. கிராம மேலாண்மை 21. போக்கு வரத்து மற்றும் சுற்றுலா 22. சில்லறை வியாபார மேலாண்மை 23. செலவு மற்றும் மேலாண்மை கணக்கு பதிவு 24. மண்ணியல் 25. தோட்டக்கலை 26. விளம்பர மேலாண்மை மாணவர்கள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அவை கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவரும் தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:

போட்டித் தேர்வுகள் இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம் கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

இந்த பிரிவை
1) நுழைவுத் தேர்வுகள்
2) பட்டபடிப்புகள்
3) டிப்ளமோ படிப்புகள்
4) சான்றிதழ் படிப்புகள் என 4 பிரிவுகளாக பிரித்து சற்று விரிவாக பார்ப்போம்.

1) நுழைவுத் தேர்வுகள்
1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (அய்.அய்.டி) 2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் 3. அய்.அய்.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு
4. கம்பைடு என்ட்ரன்ஸ் எக்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)
5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்
6. என்.அய்.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)
7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு
9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)
2) பட்டப்படிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்

1. வானூர்தி பொறியியல் 2. கட்டடக்கலை 3. தானியங்கி பொறியியல் 4. பயோ இன்பர்மேட் டிக்ஸ் 5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டே சன் என்ஜினியரிங் 6. பயோ டெக்னாலஜி 7. கட்டடக்கலை பொறியியல் 8. வேதிப் பொறி யியல் 9. தீயணைப்பு பொறியியல் 10. கணினி அறிவியல் பொறியியல் 11. கம்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் 12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் 13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு 14. மின்னியல் மற்றும் கருவி யியல் 15. தொழிற்சாலை பொறியியல் 16. சுற்று புற பொறியியல் புவித்தகவல்கள் 17. தகவல்துறைத் தொழில்நுட்பம் 18. கருவியியல் பொறியியல் 19. தோல்பொருள் தொழில்நுட்பம் 20. உற்பத்திப் பொறியியல் 21. மெரைன் இன்ஜினியரிங் 22. எலக்கட்ரானிக்ஸ் 23. மெட்டாலஜிக்கல் என்ஜினியரிங் 24. சுரங்கப் பொறியியல் 25. எரிபொருள் வேதிப்பொறியில் 26. பாலிமர் என்ஜினியரிங் 27. உற்பத்திப் பொறியியல் 28. அச்சுப்பொறியியல் 29. ரப்பர் டெக்னாலஜி

30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங் 3) டிப்ளமோ படிப்புகள்
1. கட்டடப் பொறியியல்
2. மின்சாரப் பொறியியல்
3. மின்னணுப் பொறியியல்
4. இந்திரவியல் பொறியியல்
5. உற்பத்திப் பொறியியல்
6. வேளாண்மை பொறியியல்
7. கணினி அறிவியல் பொறியியல்
8. மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு
9. கட்டடக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்
10. வேதிப்பொறியியல்
11. தோல்பொருள் தொழில்நுட்பம்
12. வேதித்தொழில்நுட்பம்
13. பாலிமர் தொழில்நுட்பம்
14. பல் பேப்பர் தொழில்நுட்பம்
15. மென்பொருள் தொழில்நுட்பம்
16. மீன்வளத் தொழில்நுட்பம்
17. கைத்தறி தொழில்நுட்பம்
18. அச்சுத்தொழில்நுட்பம்
19. பிளாஸ்டிக் டெக்னாலஜி
20. சர்க்கரைத் தொழில்நுட்பம்
21. டெக்ஸ்டைல் டெக்னாலஜி
22. கணினித் தொழில்நுட்பம்
23. கார்மெட் டெக்னாலஜி
24. மரத் தொழில்நுட்பம்
25. வனத்துறைத் தொழில்நுட்பம்
26. காலணிகள் தொழில்நுட்பம்
27. போர்மேன் டெக்னாலஜி
28. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்
29. ரெப்ரிஜிரேசன் 30. விற்பனைத் துறை
31. காஸ்மெட்டாலஜி 4) சான்றிதழ் படிப்புகள்
1. பிளாக்ஸ்மித்
2. தச்சுத்தொழில்
3. மோல்டர் 4. பெயிண்டர்
5. ஷீட் மெட்டல் ஒர்க்கர்
6. கட்டடம் கட்டுபவர்
7. பேட்டரி மேக்கர்
8. மெக்கானிக் டீசல்
9. பிளம்பர்
10. மெக்கானிக் கிரெய்ண்டர்
11. மெக்கானிக் மோட்டார்
12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்
13. வெல்டிங் கேஸ் மற்றும் மின்சாரம்
14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்
15. ஒயர்மேன்
16. டர்னர்
17. மெக்கானிஸ்ட்
18. பிட்டர்
19. எலக்ட்ரோ பிளேட்டர்
20. ஒயர்லெஸ் ஆப்ரேட்டர்
21. சர்வேயர்
22. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 23. எலக்ட்ரீசியன்
24. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிசனிங்
25. கருவி வடிவமைப்பாளர்
26. டிராப்ஸ்மேன் சிவில்
27. டிராப்ஸ்மேன் மெக்கானிக்
28.மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
29. மெக்கானிக் ஜெனரல்
30. பிழைதிருத்தல்
31. சுருக்கெழுத்து ஆங்கிலம்
32. ஹேண்ட் ஒயரிங் ஆப் பேன்சி அண்ட் பர்னிஷிசிங் பேப்ரிக்ஸ்
33. எம்பர்ராய்டரி அன்ட் டெய்லரிங்
34. கட்டிங் அண்ட் டெய்லரிங்
35. காலணிகள் உருவாக்குதல்
36. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
இந்த பிரிவை

1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள் 2) மருத்துவப் பட்டப்படிப்பு டிப்ளமோ சான்றிதழ் தகுதி
3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
4) உயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்
5) மனை அறிவியல்
6) பொதுப்பாடங்கள் என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

1)மருத்துவ நுழைவுத் தேர்வு :
1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் - பூனே
2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - உ.பி
3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெடல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜுகேசன்
4.ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் - புதுச்சேரி
5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (உ.பி)
6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி - (வேலூர்) 7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் - (புதுடில்லி) மருத்துவப் - பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்
1. எம்.பி.பி.எஸ்.
2. பி.டி.எஸ்.
3. பி.ஹெச்.எம்.எஸ்
4. பி.ஏ.எம்.எஸ்
5. பி.எஸ்.எம்.எஸ்
6. பி.பார்ம்
7. பி.பி.டி.
8. பி.எஸ்.சி (நர்சிங்)
9. பி.ஒ.டி. மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி
1. மருத்துவத் தொழில்நுட்பம்
2. லேப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்
3. லேப் டெக்னீசியன்
4. இ.சி.ஜி டெக்னீசியன்
5. டெப்டல் மெக்கானிக்
6. ஆப்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்
7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்
8. கோர்ஸ் இன் ஆட்டோமெட்ரி
9. ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்
10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி
11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்
12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ
13. மருத்துவ நுண்ணுயிரியியல்
14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்
15. பெரிபுயூசன் டெக்னாலஜி
16. பிசியோதெரபி
17. ஸ்பீச் தெரபி
18.நர்சிங் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்

1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி
2. பால்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)
3. கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச் உயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்

1. விலங்கியல் - பி.எஸ்.சி
2. மீன்வளம் - பி.எஸ்.சி
3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்
4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்
5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி 6. நுண்ணுயிரியல் - பி.எஸ்.சி, எம்.எஸ்.சி மனை அறிவியல்

1. மனை மேலாண்மை
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து 3. குழந்தை வளர்ச்சி
4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
5. உணவு சேவை மேலாண்மை
6. டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு
7. டெக்ஸ்டைல்ஸ் கிராப்ட்
8. உணவுத்தொழில்நுட்பம்
9. மனித ஊட்டச்சத்து
10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
11. உணவு உற்பத்தி
12. பயன்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி பொதுப்பாடம்

1. இயற்பியல்
2. வேதியியல்
3. தாவரவியல்
4. விலங்கியல்
5. பயன்பாட்டு புள்ளியல்
6. பயன்பாட்டு கணிதம் பொருளாதாரம், கணக்குப் பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

1. சாட்டர்டு அக்கவுண்டன்சி
2. வங்கியியல்
3. சட்டப்படிப்பு- (பி.எல்)
4. மேலாண்மை -(பி.பி.ஏ)
5. பொருளாதாரம் -(பி.ஏ)
6. வணிகவியல்
7. டீச்சிங்
8. உலக அறிவியல்
9. உளவியல்
10. வரலாறு
11. புவியியல்
12. ஆங்கிலம்
13. மொழி
14. இசை
15. நிதி
16. ஊடகம்
17. தகவல் தொடர்பு
18. காஸ்ட்அக்கவுண்டன்சி

உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:
1. உடற்கல்வி
2. சட்டப்படிப்பு
3. ஏவியேசன் - விமானப்பணிப்பெண்
4. பாஸ்மெட்டாலஜி
5. பேஷன் டெக்னாலஜி
6. காப்பீடு
7. கடல்சார்படிப்பு
8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா
9. நிழல் படம் பற்றிய படிப்பு
10. கலை/பயன்பாட்டுக் கலை
11. நகை வடிவமைப்பு
12. பேஷன் மாடலிங்
14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்
15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)
16. கலையரங்கம் மற்றும் நடிப்பு
17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு
18. நடிப்பு
19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி
20 சினிமாஸ்மோகிராபி
21. இயக்கம்
22. டைரக்சன் ஸ்டோரி பிளே ரைட்டிங்
23. வீடியோகிராபி
24. பிலிம் எடிட்டிங்
25. நாடகக்கலை
26. பிலிம் டைரக்டிங்
27. சினிமா நடிப்பு
28. ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்
29. பிலிம் எடிட்டிங்
30. படத் தயாரிப்பு
31. பிலிம் பிராசசிங்
32. பிலிம் ஸ்டடிஸ்
33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்
34. பிரிஹேன்ட் அனிமேசன்
35. பண்டமென்டல் அன்ட் ஆடியோ விஷூவல் எஜுகேசன்
36. மோசன் பிக்சரி போட்டோகிராபி
37. நிகழ்ச்சி மேலாண்மை
38. விஷூவல் கம்யூனிகேசன்
39. புத்தகப்பதிப்பு
40. அரசியல் அறிவியல்
41. குற்றவியல்
42. விக்டிமாலஜி
43. நடனம்
44. ஜெம்மாலஜி
45. தொழிற்ச்சாலை வடிவமைப்பு
46. பூமி பற்றிய அறிவியல்
47. நகரத் திட்டமிடல்
48. மண்ணியல்
49. சமூகவியல் போட்டித் தேர்வுகள்
படிப்பை முடித்த பின்னர் போட்டித் தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளை
1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவர்களுக்கான போட்டித் தேர்வுகள்.
2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாக பிரிக்கலாம்.

1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்:
1. பொறியியல் துறைத் தேர்வுகள்
2. வங்கித் தேர்வுகள்
3. இந்திய வனத்துறைத் தேர்வுகள்
4. மண்ணியல் துறைத் தேர்வுகள்
5. கம்பைடு மருத்துவத்துறை தேர்வுகள்
6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்
7. சிவில் சர்வீஸஸ் தேர்வு
8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்
9. ரயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்

2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்
1. சிவில் சர்வீஸஸ் தேர்வுகள்
2. வருமானத்துறைத் தேர்வுகள்
3. எக்சைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள் 4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு
5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு
6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு
7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்
வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் வாழ்க்கைத்தொழில் திட்டமிடல் உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறலாம்.
தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில் தொழில் வளர்ச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

Thanks: viduthalai

குறளில் கோயில் இல்லை

இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள்.
தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கவிதைத் தேனில் தந்த தேர்ந்த புலவன்
பாரதிதாசன்.

ஒரு கட்டத்தில் மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு பாடிக் கொண்டிருந்த
இந்தக் கவிஞர் புரட்சிக்கவிஞன் ஆனது மயிலாடுதுறையில் தந்தை பெரியார்
அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆகும்.

இது தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே உள்ள ஆளுமை! கருத்தின் வலிமை
சேர்ந்த வளமை!!

தந்தை பெரியாரின் ஓர் உரை ஒரு புரட்சிக்கவிஞரைத் தமிழ்நாட்டுக்குத்
தந்தது. ஒரு தொண்டரைத் திராவிடர் கழகத்துக்குத் தந்தது எனின் தந்தை
பெரியார் அவர்களின் ஒப்புவமையில்லா சிந்தனைப் பெருக்கை எண்ணிப்
பார்க்கவேண்டும் எவரும்!

தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தந்தை பெரியார் கருத்துகளை, கொள்கை
முழங்கும் எழுத்துகளைக் கொண்டு சேர்ப்பதுவரைதான் நமது கடமையும், பணியும்
ஆகும். அது கொண்டு போய் சேர்க்கப்பட்டால் அதன் வேலையைக் கண்டிப்பாய்
செய்து முடித்தே தீரும் என்பதில் எவ்வித அய்யமும் கிடையவே கிடையாது!
புரட்சிக்கவிஞரே இதற்கொரு ஈடில்லா எடுத்துக்காட்டாகும்.

இந்து சமய கலை விழா என்று கூறி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர
சரஸ்வதி சென்னையில் 1983 இல் விழா ஒன்றை நடத்துவதாக அறிவித்தார்.
இந்துத்துவாவைத் திணிக்க, பரப்பிட சங்கராச்சாரியார் புது அவதாரம்
எடுக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அன்றைய திராவிடர் கழகப்
பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்த ஆண்டுமுதல்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவை தமிழர் கலை,பண்பாட்டுப் புரட்சி
விழாவாக நடத்திட முடிவு செய்தார்.

சங்கராச்சாரியார் அந்த ஆண்டோடு அதனை மூட்டைக் கட்டிக் கொண்டாலும்
திராவிடர் கழகம் தொடர்ந்து புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை,
பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திக்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு விழாவில், அவர் கூறிய கருத்து ஒன்றுக்கு வலிமை சேர்கிறது.
குடும்ப விளக்கு நான்காம் பகுதியில் திருக்குறள் குறித்து
புரட்சிக்கவிஞர் கூறும் வரிகள் மிகவும் முக்கியமானவை நயமானவை.

நாடி முத்து வேடப்பனிடம்
இன்றியமையா ஒன்றுக்காகக்
கடன் பத்து ரூபாய் கொடுவென்று கேட்டான்
வேடன் கொடுப்பதாய் விளம்பினான் அதற்குள்
அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்
தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்
கோவிலுக் காட்டுப்பா என்று கூறினாள்
குறளில் கோயிலே இல்லையம்மா
என்றான் வேடன். இதனைக் கேட்ட
நாடிமுத்து நவிலுகின்றான்;
தில்லைக் கோவிலுக்குச் செல்ல எண்ணியே
பத்து ரூபாய் பணம் உன்னைக் கேட்டேன்
கோவில் இல்லையா குறளில்?
ஆயில் என் பணத்துக்கில்லை அழிவே!
இதன்மூலம் திருக்குறளில் கோயில் என்ற சொல்லே இல்லை என்பதை மிக அழகாக
எடுத்துக் கூறி இருக்கிறார் புரட்சிக்கவிஞர்.

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான கருத்துத் தலைதூக்கி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டு அரசின் சின்னம் இந்து மதக்கோயில் கோபுரமாக உள்ளது.

மதச்சார்பற்ற ஓர் அரசின் சின்னம் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக
இருக்கலாமா என்ற அர்த்தமுள்ள வினா சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது.
கோபுரத்திற்குப் பதில் திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் என்பதுதான்
அந்த அறிவார்ந்த யோசனையாகும்.

திருக்குறளிலேயே கோவில் இல்லை என்கிறபோது, அரசு சின்னத்தில் கோயில் ஏன்?
கோயிலையோ, கடவுள் என்ற சொல்லையோ எந்த இடத்திலும் குறிப்பிடாத மிகமிகச்
சிறந்த மதச் சார்பற்ற புலவரான திருவள்ளுவர் உருவத்தை கோயிலுக்குப்பதில்
பொறிப்பது என்பதுதானே பொருத்தமானதும், அறிவார்ந்ததுமாக இருக்க முடியும்?

இந்தக் கருத்தை சட்டப்பேரவையில் தோழர் ரவிக்குமார் தெரிவித்தாலும்,
இதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் புரட்சிக்கவிஞர்தான் என்பதை, கவிஞரின்
பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.

அடுத்த கட்டத்திற்கு இந்தக் கருத்தை நகர்த்த சூளுரைப்போம்!

“விடுதலை” தலையங்கம் 29-4-2010

Tuesday, February 23, 2010

மன்னிப்பு கேட்க மாட்டேன்… தேவைப்பட்டால் நடிப்பை விட்டுவிடுகிறேன்! – அஜீத்

சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகி மீண்டும் மோட்டார் ரேஸூக்குப் போய்விடுவேன்…” என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியான அஜீத்தின் சிறப்புப் பேட்டியை இங்கே தமிழில் தருகிறோம்.
அவர் கூறியிருப்பதாவது:
“முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்… என்ன நடந்ததே, அதைத்தான் சொன்னேன். எனவே அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அதைவிட நடிப்பை விட்டு விலகுவதையே விரும்புவேன்!
நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?
நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிகது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.
ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?
இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்க நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை… அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக்கொண்டு விழிப்பது நாங்கள்தான்.
யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப்பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்ல எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?
பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?
அது இங்கு மட்டுமல்ல… எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நானும் பிறப்பால், இருப்பிடத்தால் முழுமையான தமிழன்தான். தமிழனாகவே பிறந்தேன், வாழ்கிறேன் (அஜீத்தின் தந்தை வழியினருக்கு பூர்வீகம் கேரளா. ஆனால் அவரது தந்தை தஞ்சையில் பிறந்து தமிழகத்தில் செட்டிலானவர். தாய் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.).
நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?
கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே என்ன வேலை?’ என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…
உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணுவேன். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தரவே நான் விரும்புகிறேன்.
பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.
நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம். பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார்ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது…”

Saturday, February 6, 2010

ஒரு பழைய கதை

ஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் நன்றாக மண்வெட்டி ஒரு உருளை கிழங்கு தோட்டம் பயிரிட விரும்பினார். அது அவரால் செய்யமுடியாத அளவிற்கு மிகவும் அதிக வேளையாயிருந்தது. அவருக்கென்று உதவியாக இருந்த அவரது ஒரே மகன் சிறைச்சாலையிலிருந்தான்
அந்த வயதான மனிதர் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
அன்புள்ள மகனுக்கு,
நான் இந்த வருடம் உருளை கிழங்கு தோட்டம் நட முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் இந்த வருடம் தோட்டம் பயிரிடாதிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் உனது அம்மாவிற்கு தோட்டம் பயிரிடுதால் மிகவும் பிரியமாயிருந்தது. எனக்கு மிகவும் வயதான காரணத்தினால் தோட்டத்தை பயிரிட உழவு வேலை செய்யமுடியவில்லை. நீ இங்கு இருந்திருந்தால் என்னுடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும். எனக்கு தெரியும் நீ சிறையிலில்லாமலிருந்தால் எனக்காக தோட்டத்தை உழவு செய்து கொடுத்திருப்பாய்.
அன்புடன்,
அப்பா.

சிறிது நாட்களில் அந்த வயதான மனிதருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. “கடவுளே, நல்ல வேலையாக நீங்கள் தோட்டத்தை உழவு செய்யவில்லை, ஏனென்றால் அங்கு தான் எல்லா துப்பாக்கிகளையும் நான் புதைத்து வைத்துள்ளேன்”.

அடுத்த நாள் விடிகாலை 4 மணிக்கு ஒரு டஜன் காவலர்கள் வீட்டிற்கு வந்தார்கள். பின்னர் அந்த தோட்டத்தில் துப்பாக்கிகளை தேடுவதற்காக எல்லா இடங்களிலும் தோண்டி பார்த்தனர். ஆனால் எந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குழப்பத்திலிருந்த அந்த மனிதர் அடுத்த நாளன்று அவரது மகனிற்கு இன்னொரு கடிதம் எழுதி என்ன நடந்ததென்று விளக்கிவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கேட்டு எழுதினார்.
அவரது மகன் அடுத்த கடிதத்தில் சொன்னது : “நீங்கள் சென்று உருளைகிழங்கு தோட்டத்தை அங்கே பயிருடுங்கள் அப்பா, இதுதான் நான் இங்கே இருந்து கொண்டு உங்களுக்கு செய்ய முடிந்த பெரிய உபகாரம்”.
நீதி : நீங்கள் உலகில் எங்கே இருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல, ஒன்று செய்ய வேண்டுமென்று உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நீங்கள் முடிவு செய்து கொண்டால் உங்களால் அதனை செய்ய முடியும். எண்ணங்கள் தான் மிகவும் முக்கியம், நாம் எங்கு இருக்கிறோமோ அல்லது அந்த மனிதர் எங்கு இருக்கின்றார்களோ அது அல்ல.

Thursday, January 21, 2010

பொதுவுடைமை தத்துவம்

ஒரு பொருளியல் விரிவுரையாளர் உள்@ர் கல்லூரி ஒன்றில் கொடுத்த அறிக்கையில் அவர் இதுவரை ஒரு மாணவரை கூட தேர்வில் தோல்வியடைய செய்ததில்லை என்று கூறியிருந்தார். அவரது வகுப்பில் இருந்த மாணவர்கள் ஒபாமாவின் பொதுவுடைமை தத்துவம் நன்றாக வேலை செய்வதாகவும், இதற்கு பிறகு எவரும் ஏழையாகவும் இருக்கமாட்டார்கள் எவரும் பணக்காரராகவும் இருக்கமாட்டார்கள், மிகப் பெரிய சமத்துவம் என்று கூறினர்.
அந்த விரிவுரையாளர் அதற்கு நாம் இந்த தத்துவத்தை நமது வகுப்பில் செயல்படுத்தி பார்ப்போம் என்றார், எல்லாரது மதிப்பெண்களும் கூட்டி சராசரியை எல்லா மாணவர்களுக்கும் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
முதல் தேர்வில் எல்லாரது மதிப்பெண்களும் கூட்டி சராரசரியாக எல்லாருக்கும் 70 சதவீதம் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். குறைவான மதிப்பெண் எடுத்த அணைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
அடுத்த தேர்வில் குறைவாக படித்த மாணவர்கள் இன்னும் குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். ஆதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களும் குறைவாக படித்து குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். எனவே அனைவரும் சராசரியாக 50 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. எனவே யாருமே மகிழ்சியாக இருக்கவில்லை.
மூன்றாவது தேர்வில் இன்னும் குறைவான மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள், நான்காவது தேர்வில் அனைவரும் தோல்வியடையும் அளவுக்கே சராசரி மதிப்பெண் இருந்தது.
பிறகு அந்த விரிவுரையாளர் “பொதுவுடைமை தத்துவமும் தோல்வியடையும், ஏனென்றால் வெகுமதி அதிகமாக இருக்கும் போது முயற்சியும் அதிகமாக இருக்கும், அரசு அந்த வெகுமதியை எடுத்துப் போடும்போது எவருமே வெற்றி பெற முயற்சிக்கமாட்டார்கள்” என்றார்.

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...