Thursday, July 26, 2007

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்


அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஒரு அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பாரத்து தினம் உன் தலை கோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்


நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில்
மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான்
பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் சீண்டலில் என் தேகத்தை புது
ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

Monday, July 23, 2007

எங்கள் ஏற்காடு பயணம்

23.07.07

அன்று விடியற்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்திருந்து வாகன ஓட்டுனருக்கு (டிரைவர்) செல் அலைபேசியில் அழைத்து 6 மணிக்கு வீட்டின் அருகே வரச் சொல்லிவிட்டு பின்னர் நாங்கள் மூவரும் (நான் எனது தம்பிகள் அருண் மற்றும் மணி) கிளம்பி சரியாக 6 மணிக்கு வந்த போது தமிழ்செல்வி மற்றும் சங்கீதாவிடமிருந்து போன் அழைப்பு, ஆனந்த் திரையரங்கு அருகே அவர்களை வரச் சொல்லி வண்டியில் ஏற்றிய பின்பு பார்த்தால் மூன்று தடியர்கள் (கார்த்திக், துரை பாபு மற்றும் ஜெயபிரகா~;) இன்னும் கிளம்பாமல் வீட்டிலிருந்தனர். அங்கு சென்று நன்றாக நான்கு அடி வைத்து அவர்களை கிளப்பி வந்தோம். ஒரு வழியாக கார்த்திக் (இது மற்றொரு கார்த்தி) மற்றும் கலை இருவரையும் பிக்கப் செய்து கொண்டு வண்டி ஏற்காடு நோக்கி கிளம்பியது.

ஆன் தி வே யில் நமது சுதர்சனம் போன் செய்து அவரது வீட்டில் சிலபல வேலைகள் இருப்பதால் இந்த இன்ப சுற்றுலாவிற்கு வர இயலவில்லை என்று சொல்லி போனை வைத்தார். பிறகு நீண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு எனது டீம்(பத்மினி) போன் செய்திருந்தார்(அவர் ஹைதராபாத்தில் ஐ.ஐ.டி. யில் சேர்ந்திருப்பதால் வர இயலவில்லை) அவருடன் ஒரு அரை மணி நேரம் போனில் நாங்கள் அரட்டை அடித்தபடியே சேலத்தை 9 மணியளவில் வந்தடைந்தோம். அங்கு காலை டிபனை முடித்துவிட்டு பின்னர் ஏற்காடு சென்ற பொழுது 11 மணி.

முதலில் பக்கோடா பாயின்ட். அங்கு பக்கோடா கிடைக்கவில்லை ஆனால் பொழுது சிறப்பே சென்றது. பின்னர் சில்ட்ரன்ஸ் சீட் சென்றோம். அங்கு துரையை கீழே கிடத்தி உருட்டி விட முயன்றோம். ஆனால் ஜஸ்ட் மிஸ். பின்னர் அங்கு பராக்கு பார்த்து கொண்டே இறங்கி ரோஜா தோட்டத்திற்கு சென்றோம். அங்கு சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்து திரும்பிய பின்னர் அருகிலுள்ள லேடீஸ் ஸீட் என்ற இடத்திற்கு சென்றோம். அங்கு கோக் வாங்கி குடித்த படியே அருகிலுள்ளோரை வேடிக்கை பார்த்து கொண்டே சிறிது நேரத்தை கழித்தோம்.

அங்கிருந்து நேராக நாங்கள் சென்ற இடம் சேர்வராயன் மலை. என்ன ஒரு அருமையான இடமாக இருந்த அந்த இடம் இப்பொழுது கேவலமாக இருந்தது. இருந்தாலும் குகைக்குள்ளே இருந்த அந்த கோயில் நன்றாக இருந்தது. அங்கு உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது தான் நமது ஜெயப்பிரகா~; ஏதோ நடையிலேயே கண்டு பிடிப்பேன் என்று பெரிய ஜோக் ஒன்றை அடித்தார் (விவரங்கள் போனில், நேரில் மட்டும் :) ).

அங்கிருந்து நேராக நாங்கள் சென்ற இடம் பார்க், அங்கு சென்று மிளகாய் பஜ்ஜியை சாப்பிட்டுவிட்டு நேராக ஓட்டல். அங்கு ஒரு மிக முக்கிய நிகழ்வு. நமது கார்த்திகேயன் அன்று பியர் அடித்தார். அதுதான் மிக முக்கிய நிகழ்வு.

அதன் பிறகு நேராக ஏற்காடு ஏரி சென்று மிதி படகில் சென்றோம். நானும் கலையும் இருவர் மிதி படகிலும், ஜெயபிரகா~;, கார்த்திகேயன், சங்கீதா மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் நான்கு பேர் மிதி படகிலும் சவாரியை ஆரம்பித்தோம். நடுவில் அந்த படகிலிருந்து எங்கள் படகிற்கு கேமராவை மாற்றி சர்கஸ் வித்தைகள் வேறு. பின்னர் அருகிலுள்ள வனச்சரக பூங்கா மற்றும் மீன் பார்வையிடம் பார்த்து வெளியே வந்தபோது மணி 5 ஆகியது. நாங்கள் எங்கள் பயணத்தை முடித்து திரும்ப சேலம் வந்தபோது மணி 6.45. நாங்கள் எதிர்பார்த்ததற்கு முன்னமே வந்ததால் சேலத்திலுள்ள அண்ணா பார்க்கிற்கு சென்றோம்.

அங்கு நமது துரைக்கு கோபம் வந்து எங்களை நட்டாற்றில் விட்டு விட்டு வெளியேறினார், பின்னர் போன் செய்து சொல்லிய பிறகு திரும்ப வந்தார் (இருந்தாலும் இரவு விருந்தில் சரியாக சாப்பிடாமல் கோபத்தை வெளிக்காட்டினார்).

அதன் பிறகு நாங்கள் வந்த இடம் கிரீன் பார்க் ரெஸ்டாரென்ட். மணி 7.45. அங்கு டின்னர். ஆடு கோழி மீன் இரால் நண்டு வகைகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டோம். அங்கே நமது சுதர்சனம் மற்றும் திவ்யா இருவரும் நமது விருந்தில் இனைந்தனர்.

பின்னர் 9.30 மணியளவில் கலை மற்றும் ஜெயபிரகா~; இருவரையும் பெங்க@ரு செல்லும் பேருந்தில் எற்றிவிட்டு, நான் கார்த்தி மற்றும் கார்த்திகேயன் மூன்று பேரும் அலறியடித்து (காரணம் போனில் அல்லது நேரில் மட்டும்) வந்து பஸ்ஸில் ஏறி பயணத்தை தொடர்ந்தோம். வழியில் டிராபிக் ஜாம். ஒரு மணி நேரம் தொப்பூர் அருகே நின்று பின்னர் 12 மணியளவில் வீட்டை அடைந்து உறங்க ஆரம்பித்தோம்.

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...