Wednesday, March 28, 2007

நக்கீரர் தேவர் அருளியது விநாயகர் திருவகவல்

சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே
கார்நிற மேனக் கற்பகக் களிறே
அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மவிய மார்பா!
பொங்கர வணிந்த புண்ணிய மார்பா!
சங்கர னருளிய சற்குரு விநாயக!
ஏழை யடியேன் இருவிழி காண
வேழ முகமும் வெய்பிளைக் கோடும்
பெருகிய செவியும் பேழை வயிறுந்
திருவளர் நுதலில் திருநீற் றழகுஞ்
சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்
நவமணி மகுட நன்மலர் முடியும்
கலச குண்டலக் காந்தியும் விளங்கச்
சிந்துரத் திலகச் சந்தனப் பொட்டும்
ஐந்து கரத்தின் அழகும் லீற்றிருக்கப்
பாச வினையைப் பறித்திடும் அங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும்
பொன்னா பரணமும் பொருந்துமுந் நூலும்
மின்னா மெனவே விறங்குபட் பழகும்
உந்திச் சுழியு முரோமத் தழகுந்
தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற
மூலா தார முச்சுடர் காட்டி
வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி
மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டிப்
பேணிப் பணியப் பீஜா க்~ரமும்
ஓமென் றுதித்த ஓங்கார துள்ளே
ஆமென் றெழுந்த அக்~ர வடிவும்
இடைபிங் கலைக ளிரண்டின் நடுலே
கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து
மண்டல மூன்றும் வாயுவோர் பத்துங்
குண்டலி யசபை கூறிய நாடியும்
பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையுங் காட்டி
ஆறா தார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டிப்
பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த
பஞ்ச சக்திகளின் பாதமுங் காட்டி
நவ்வொடு மவ்வும் நடுவணை வீட்டில்
அவ்வு மாக்கினை அநாதி சதாசிவம்
மைவிழி ஞான மனோன்மணி பாதமும்
நைவினை நாணுகா நாத கீதமும்
கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து
விண்டல மான வெளியையுங் காட்டிப்
ஐம்பத்தோ ரெழுத் தட்சர நிலையை
இன்h சக்கர விதிதனைக் காட்டிப்
புருவ நடுவணை பொற்கம லாசான்
திருவிளை யாடலுந் திருவடி காட்டி
நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப்
போதம் நிறைந்த பூரணங் காட்டி
உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப்
பவளம் நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாயச் சேர்வையுங் காட்டிச்
சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித்
தத்துவந் தொண்ணூற் றாறையும் நீக்கிக்
கருவி கரணக் களங்க மறுத்து
மருவிய பிறவி மாயையை நீக்கி
உம்பர்கள் ரி~pகள் ஒருவருங் காணா
அம்பர வெளியி னருளையுற் காட்டிச்
சத்தி பராபரை சதாநந்தி நிராமய
நிததிய ரூபி நிலைமையுங் காட்டி
அடியவர் ஞான வமிர்தமா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி
நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து
நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
விண்மய மான விதத்தையுங் காட்டித்
தராதல முழுதுந் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி
என்னுட லாவி யிடம்பொருற் யாவுந்
தன்னுடை வசமாந் தவநிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந் தீர
ஆன குருவா யாட்கொண் டருளி
மோன ஞான முழுது மளித்துச்
சிற்பரி பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிட்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீடனுஞ் கூடிக் கலந்து
இருவரு மொருதனி யிடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
புவனத் தொழிலைப் பொய்யென் றுணர்ந்து
மவுன முத்திரையை மனத்தி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டவை மாயை கனவெனக் காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈ சன் இணையடி யிருத்தி மனத்தே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவென வுணர்நது
எல்லா முன்செய லென்றே யுணர
நல்லா யுன்னருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே!
வாரண முகத்து வள்ளலே போற்றி!
நித்திய பூசை நைவேத் தியமும்
பத்தியாய்க் கொடுத்துப் பரமனைப் போற்றி
ஏத்தி யனுதினம் எளியேன் பணியக்
கூற்றினை உதைத்து குளிர்பதந் தந்து
ஆசு மதுர வமிர்த மளித்துப்
பேசு ஞானப் பேறெனக் கருளி
மனதில் நினைத்த மதுர வாசகம்
நினைவிலுங் கனவிலும் நேசம் பொருந்தி
அருண கிரியா ரவ்வை போலக்
கருத்து மிகுந்து கவிமழை பொழிய
வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து
நோக்கரு ஞான நோக்கு மளித்து
இல்லற வாழ்க்கை யிடையூ றகற்றிப்
புல்ல ரிடத்திற் புகுந்(து) உழலாமல்
ஏற்ப திகழ்ச்சி என்ப தகற்றிக்
காப்ப துனக்குக் கடன்கண் டாயே!
நல்வினை தீவினை நாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நியே ஈ சனும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அகரியும் நீயே அயனும் நீயே
சக்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே புரந்தகன் நீயே
பத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேகியும் நீயே!
உன்னரு ளன்றி யுயிர்த்துணை காணேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
வேதன் கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருந்திடு சிலேட்டுமம்
மூன்று நாடியு முக்குண மாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலாயிரத்து நானூற்று நாற்பத் தெட்டு
மேலாம் வினையை மெலியக் களைந்து
அஞ்சா நிலைமை யருளியே நித்தம்
பஞ்சாட் சரநிலை பாலித் தெனக்குச்
செல்வமும் கல்வியுஞ் சீரும் பெருக
நல்வர மேதரும் நான்மறை விநாயகா
சத்திய வாக்குச் சத்தா யுதவிப்
புத்திர னேதரும் புண்ணி முதலே
வெண்ணீ றணியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே
அரிதிரு மருகா அறுமுகன் றுணைவா
கரிமுக வாரணக் கணபதி சரணம்!
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயிற் றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
மாதை வாவி மலர்த்டத் தருகில்
தானத்தில் வாழுந் தற்பரா சரணம்!
உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சி தானந்த சற்குரு சரணம்
விக்கின விநாயக தேவே ஓம் ஓம்!
அரகர சண்முக பவனே ஓம் ஓம்!
சிவசிவ மகாதேவ சம்போ ஓம் ஓம்!

No comments:

Post a Comment

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...