புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்
பட்டிருக்கிறோம்.
பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்படி அழைப்பது உண்டு.
பொறுப்பின்றி நடந்து கொள்பவர்களையும் இந்த வார்த்தையைச் சொல்லி திட்டுவதையும் கேள்விப் பட்டிருக்கலாம்.
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல!
_*இது ஒருவருடைய பெயர் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?*_
இங்கிலாந்து அரசு வரிவிதிப்பு அதிகாரிகளில் _*ஒருவர் பெம்புரோக்.*_
இங்கிலாந்திலும், அவர்கள் ஆட்சிப்பகுதியின் கீழ் இருந்த பல்வேறு நாட்டுப் பகுதிகளிலும் வரி வசூலாகாமல் நிறைய இடங்கள் இருந்தன. அந்த இடத்துக்குரியவர்கள் யார்? ஏன் வரி செலுத்தவில்லை. நிலத்துக்குரியவர்கள் இருக்கிறார்களா? இல்லை மறைந்து விட்டார்களா என்பதை விசாரித்து வரி வசூலிப்பை தீவிரப்படுத்தும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவரும் நில உரிமையாளர்களைச் சந்தித்து, வரி வசூலித்ததுடன், வரி செலுத்தாமல் இடம் பெயர்ந்தவர்கள், மறைந்தவர்கள் ஆகியவர்களின் நிலங்களை அரசுடமை ஆக்கினார்.
இப்படி இந்தியப் பகுதியிலும் ஏராளமான சொத்துக்கள் ஆங்கிலேயர் வசமாயின. அப்படி கைப்பற்றப்பட்ட இடங்களை _*"பெம்புரோக் நிலம் "*_ என்று அழைக்கப் பட்டன. காலப்போக்கில் அந்த சொல் மருவி _*"புறம்போக்கு"*_
என அழைக்கப்
படலாயிற்று.