Tuesday, March 27, 2007

நாயகன் பாணியில் இந்திய அணியின் நாயகன் பேசினால்...??!!

அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன். கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலே மீட்டர் ஓடிப்போங் பந்ததைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்தறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால் வடை வைக்குற மாதிரி ஸ்pலப் வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்த்னே அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் நோபால் போட்டான் பாரு டெண்டுல்கர் அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல் நான் நிறுத்தறேன். எந்தப்பக்கம் அடிச்சாலும் அந்தப்பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு அதை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்கிறானுங்க பாரு அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்தறேன். புறபடும்போதே கமான் இந்தியான்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன் அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா, எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வௌஸ்தை கெட்டவனுங்க, அவனுங்களை நிறுத்தச்சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்..

No comments:

Post a Comment

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...