இன்று காலை சுமார் 7.00 மணியளவில் எழுந்த நான் கிளம்பி சாப்பிட்டு டெய்லி டியூட்டீ (இது மட்டும் பர்சனல், நான் என்ன வேலைனு சொல்லமாட்டேன்....) க்கு சரியாக 9 மணிக்கு சென்றேன். டியூட்டி முடிந்து 10.15 அளவில் அலுவலகம் சென்று காலையில் வேலையில் மனம் ஓடாத காரணத்தால் மற்ற மெயில்களை பார்த்து விட்டு மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என பராக்கு பார்த்தேன். பின்னர் டீ பிரேக். கடைக்கு சென்று ஆல்பன்லீபே வாங்கி தின்றுகொண்டே மீண்டும் வேலை. அருகிலிருப்பவர் (வேற யாரு பிரகா~; தான்) டாக்குமெண்ட் செய்தவற்றை சரிபார்த்தேன்.
பின்னர் இன்றுதான் ஒரு மிக முக்கிய செய்தி கண்ணில் பட்டது. (இது எங்க டீம் எனக்கு சொன்னது). அது 13 ஆம் வெள்ளியின் தவறு (பிரைடே த 13த் பக்), நான் கூகுலில் தேடி பிடித்த http://www.2038bug.com/, இந்த வெப் சைட்டில் போட பட்டிருக்கிறது. அதை படித்த பின் துரை பாபுவிடம் ஒரு 15 நிமிடம் மொக்கை. பிறகு மதிய உணவிற்கு சென்று, தின்று, மீண்டும் ஒரு டியூட்டி. பின்னர் விசுவல் பேசிக் இன்ஸ்டால் பண்ணிவிட்டு மறுபடியும் அலுவலகம் வரும் போது மணி 3.
பின்னர் சிறிது நேரம் எனது வேலையை செய்து கொண்டிருந்தேன். ஒரு 5 மணியளவில் லினக்ஸில் உள்ள சில பைல்களை விண்டோஸிற்கு மாற்ற ஒரு டூல் இன்ஸ்டால் செய்து விட்டு, மீண்டும் ஒரு டீ பிரேக். அங்கு நாங்கள் சாப்பிட்ட லிஸ்ட் டீ, காபி, வெஜ் பப்ஸ், அல்வா, சிக்கன் 65, மட்டன் சூப், பனியாரம், தயிர்சாதம் வித் உருளைகிழங்கு பொரியல்.
அதன்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கும் போது தான், இதை இந்த பிளாக்கில் போடலமென ஒரு எண்ணம் தோன்றியது, அதையும் உடனே நிறைவேற்றிவிட்டேன்.
எனது புலம்பல், அலம்பல், நக்கல்,கிண்டல் மற்றும் அடுத்வனோட வயித்தெரிச்சல் எல்லாம்......
Subscribe to:
Post Comments (Atom)
புறம்போக்கு
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...
-
நீ போகும் இடமெல்லாம் பாடல் வரி :Dr.Rev.Ezekiel George. Music : Suresh George. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே ந...
-
சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய ம...
-
*தமிழ் அறிவோம்..!* ------------------- *ண ன ந* எங்கெல்லாம் வரும் ? மூனுசுழி *“ண”*, ரெண்டுசுழி *“ன” "ந"* என்ன வித்தியாசம்? ப...
No comments:
Post a Comment