சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகி மீண்டும் மோட்டார் ரேஸூக்குப் போய்விடுவேன்…” என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியான அஜீத்தின் சிறப்புப் பேட்டியை இங்கே தமிழில் தருகிறோம்.
அவர் கூறியிருப்பதாவது:
“முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்… என்ன நடந்ததே, அதைத்தான் சொன்னேன். எனவே அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அதைவிட நடிப்பை விட்டு விலகுவதையே விரும்புவேன்!
நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?
நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிகது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.
ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?
இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்க நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை… அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக்கொண்டு விழிப்பது நாங்கள்தான்.
யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப்பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்ல எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?
பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?
அது இங்கு மட்டுமல்ல… எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நானும் பிறப்பால், இருப்பிடத்தால் முழுமையான தமிழன்தான். தமிழனாகவே பிறந்தேன், வாழ்கிறேன் (அஜீத்தின் தந்தை வழியினருக்கு பூர்வீகம் கேரளா. ஆனால் அவரது தந்தை தஞ்சையில் பிறந்து தமிழகத்தில் செட்டிலானவர். தாய் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.).
நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?
கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே என்ன வேலை?’ என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…
உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணுவேன். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தரவே நான் விரும்புகிறேன்.
பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.
நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம். பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார்ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது…”
எனது புலம்பல், அலம்பல், நக்கல்,கிண்டல் மற்றும் அடுத்வனோட வயித்தெரிச்சல் எல்லாம்......
Tuesday, February 23, 2010
Saturday, February 6, 2010
ஒரு பழைய கதை
ஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் நன்றாக மண்வெட்டி ஒரு உருளை கிழங்கு தோட்டம் பயிரிட விரும்பினார். அது அவரால் செய்யமுடியாத அளவிற்கு மிகவும் அதிக வேளையாயிருந்தது. அவருக்கென்று உதவியாக இருந்த அவரது ஒரே மகன் சிறைச்சாலையிலிருந்தான்
அந்த வயதான மனிதர் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
அன்புள்ள மகனுக்கு,
நான் இந்த வருடம் உருளை கிழங்கு தோட்டம் நட முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் இந்த வருடம் தோட்டம் பயிரிடாதிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் உனது அம்மாவிற்கு தோட்டம் பயிரிடுதால் மிகவும் பிரியமாயிருந்தது. எனக்கு மிகவும் வயதான காரணத்தினால் தோட்டத்தை பயிரிட உழவு வேலை செய்யமுடியவில்லை. நீ இங்கு இருந்திருந்தால் என்னுடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும். எனக்கு தெரியும் நீ சிறையிலில்லாமலிருந்தால் எனக்காக தோட்டத்தை உழவு செய்து கொடுத்திருப்பாய்.
அன்புடன்,
அப்பா.
சிறிது நாட்களில் அந்த வயதான மனிதருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. “கடவுளே, நல்ல வேலையாக நீங்கள் தோட்டத்தை உழவு செய்யவில்லை, ஏனென்றால் அங்கு தான் எல்லா துப்பாக்கிகளையும் நான் புதைத்து வைத்துள்ளேன்”.
அடுத்த நாள் விடிகாலை 4 மணிக்கு ஒரு டஜன் காவலர்கள் வீட்டிற்கு வந்தார்கள். பின்னர் அந்த தோட்டத்தில் துப்பாக்கிகளை தேடுவதற்காக எல்லா இடங்களிலும் தோண்டி பார்த்தனர். ஆனால் எந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குழப்பத்திலிருந்த அந்த மனிதர் அடுத்த நாளன்று அவரது மகனிற்கு இன்னொரு கடிதம் எழுதி என்ன நடந்ததென்று விளக்கிவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கேட்டு எழுதினார்.
அவரது மகன் அடுத்த கடிதத்தில் சொன்னது : “நீங்கள் சென்று உருளைகிழங்கு தோட்டத்தை அங்கே பயிருடுங்கள் அப்பா, இதுதான் நான் இங்கே இருந்து கொண்டு உங்களுக்கு செய்ய முடிந்த பெரிய உபகாரம்”.
நீதி : நீங்கள் உலகில் எங்கே இருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல, ஒன்று செய்ய வேண்டுமென்று உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நீங்கள் முடிவு செய்து கொண்டால் உங்களால் அதனை செய்ய முடியும். எண்ணங்கள் தான் மிகவும் முக்கியம், நாம் எங்கு இருக்கிறோமோ அல்லது அந்த மனிதர் எங்கு இருக்கின்றார்களோ அது அல்ல.
அந்த வயதான மனிதர் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
அன்புள்ள மகனுக்கு,
நான் இந்த வருடம் உருளை கிழங்கு தோட்டம் நட முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் இந்த வருடம் தோட்டம் பயிரிடாதிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் உனது அம்மாவிற்கு தோட்டம் பயிரிடுதால் மிகவும் பிரியமாயிருந்தது. எனக்கு மிகவும் வயதான காரணத்தினால் தோட்டத்தை பயிரிட உழவு வேலை செய்யமுடியவில்லை. நீ இங்கு இருந்திருந்தால் என்னுடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும். எனக்கு தெரியும் நீ சிறையிலில்லாமலிருந்தால் எனக்காக தோட்டத்தை உழவு செய்து கொடுத்திருப்பாய்.
அன்புடன்,
அப்பா.
சிறிது நாட்களில் அந்த வயதான மனிதருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. “கடவுளே, நல்ல வேலையாக நீங்கள் தோட்டத்தை உழவு செய்யவில்லை, ஏனென்றால் அங்கு தான் எல்லா துப்பாக்கிகளையும் நான் புதைத்து வைத்துள்ளேன்”.
அடுத்த நாள் விடிகாலை 4 மணிக்கு ஒரு டஜன் காவலர்கள் வீட்டிற்கு வந்தார்கள். பின்னர் அந்த தோட்டத்தில் துப்பாக்கிகளை தேடுவதற்காக எல்லா இடங்களிலும் தோண்டி பார்த்தனர். ஆனால் எந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குழப்பத்திலிருந்த அந்த மனிதர் அடுத்த நாளன்று அவரது மகனிற்கு இன்னொரு கடிதம் எழுதி என்ன நடந்ததென்று விளக்கிவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கேட்டு எழுதினார்.
அவரது மகன் அடுத்த கடிதத்தில் சொன்னது : “நீங்கள் சென்று உருளைகிழங்கு தோட்டத்தை அங்கே பயிருடுங்கள் அப்பா, இதுதான் நான் இங்கே இருந்து கொண்டு உங்களுக்கு செய்ய முடிந்த பெரிய உபகாரம்”.
நீதி : நீங்கள் உலகில் எங்கே இருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல, ஒன்று செய்ய வேண்டுமென்று உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நீங்கள் முடிவு செய்து கொண்டால் உங்களால் அதனை செய்ய முடியும். எண்ணங்கள் தான் மிகவும் முக்கியம், நாம் எங்கு இருக்கிறோமோ அல்லது அந்த மனிதர் எங்கு இருக்கின்றார்களோ அது அல்ல.
Thursday, January 21, 2010
பொதுவுடைமை தத்துவம்
ஒரு பொருளியல் விரிவுரையாளர் உள்@ர் கல்லூரி ஒன்றில் கொடுத்த அறிக்கையில் அவர் இதுவரை ஒரு மாணவரை கூட தேர்வில் தோல்வியடைய செய்ததில்லை என்று கூறியிருந்தார். அவரது வகுப்பில் இருந்த மாணவர்கள் ஒபாமாவின் பொதுவுடைமை தத்துவம் நன்றாக வேலை செய்வதாகவும், இதற்கு பிறகு எவரும் ஏழையாகவும் இருக்கமாட்டார்கள் எவரும் பணக்காரராகவும் இருக்கமாட்டார்கள், மிகப் பெரிய சமத்துவம் என்று கூறினர்.
அந்த விரிவுரையாளர் அதற்கு நாம் இந்த தத்துவத்தை நமது வகுப்பில் செயல்படுத்தி பார்ப்போம் என்றார், எல்லாரது மதிப்பெண்களும் கூட்டி சராசரியை எல்லா மாணவர்களுக்கும் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
முதல் தேர்வில் எல்லாரது மதிப்பெண்களும் கூட்டி சராரசரியாக எல்லாருக்கும் 70 சதவீதம் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். குறைவான மதிப்பெண் எடுத்த அணைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
அடுத்த தேர்வில் குறைவாக படித்த மாணவர்கள் இன்னும் குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். ஆதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களும் குறைவாக படித்து குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். எனவே அனைவரும் சராசரியாக 50 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. எனவே யாருமே மகிழ்சியாக இருக்கவில்லை.
மூன்றாவது தேர்வில் இன்னும் குறைவான மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள், நான்காவது தேர்வில் அனைவரும் தோல்வியடையும் அளவுக்கே சராசரி மதிப்பெண் இருந்தது.
பிறகு அந்த விரிவுரையாளர் “பொதுவுடைமை தத்துவமும் தோல்வியடையும், ஏனென்றால் வெகுமதி அதிகமாக இருக்கும் போது முயற்சியும் அதிகமாக இருக்கும், அரசு அந்த வெகுமதியை எடுத்துப் போடும்போது எவருமே வெற்றி பெற முயற்சிக்கமாட்டார்கள்” என்றார்.
அந்த விரிவுரையாளர் அதற்கு நாம் இந்த தத்துவத்தை நமது வகுப்பில் செயல்படுத்தி பார்ப்போம் என்றார், எல்லாரது மதிப்பெண்களும் கூட்டி சராசரியை எல்லா மாணவர்களுக்கும் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
முதல் தேர்வில் எல்லாரது மதிப்பெண்களும் கூட்டி சராரசரியாக எல்லாருக்கும் 70 சதவீதம் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். குறைவான மதிப்பெண் எடுத்த அணைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
அடுத்த தேர்வில் குறைவாக படித்த மாணவர்கள் இன்னும் குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். ஆதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களும் குறைவாக படித்து குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். எனவே அனைவரும் சராசரியாக 50 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. எனவே யாருமே மகிழ்சியாக இருக்கவில்லை.
மூன்றாவது தேர்வில் இன்னும் குறைவான மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள், நான்காவது தேர்வில் அனைவரும் தோல்வியடையும் அளவுக்கே சராசரி மதிப்பெண் இருந்தது.
பிறகு அந்த விரிவுரையாளர் “பொதுவுடைமை தத்துவமும் தோல்வியடையும், ஏனென்றால் வெகுமதி அதிகமாக இருக்கும் போது முயற்சியும் அதிகமாக இருக்கும், அரசு அந்த வெகுமதியை எடுத்துப் போடும்போது எவருமே வெற்றி பெற முயற்சிக்கமாட்டார்கள்” என்றார்.
Friday, June 5, 2009
சத்தமிடுதல்:
ஒரு புனிதர் அவரது சிஷ்யர்களிடம் கேட்டார் “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்?”, “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்? ஏன் மக்கள் அவர்கள் சிக்கலில் இருக்கும்போது மற்றவர்களிடம் சத்தமிட்டு பேசுகிறார்கள் ?”
அவரது சிஷ்யர்கள் சிறிது நேரம் ஆலோசனை செய்தனர். அவர்களில் ஒருவன் சொன்னான் “ஏனென்றால் நாம் அமைதியை இழந்து விடுவதால் சத்தமிடுகிறோம்”.
“ஆனால், அடுத்தவர் நமது மிக அருகில் இருக்கும் போது, நாம் ஏன் மிகவும் சத்தமிடவேண்டும்? அவர்களிடம் மிகவும் மென்மையாக பேச முடியாதா? நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்? ” என்று திரும்பவும் கேட்டார்.
அவரது சிஷ்யர்கள் கொடுத்த விடைகளால் அவரை திருப்திபடுத்த இயலவில்லை.
கடைசியாக அவர் சொன்னார் “ஒருவர் மேல் ஒருவர் கோபமாக இருக்கும்போது அவர்களது இருதயத்தின் (மனது) தூரமும் அதிகமாக இருக்கும். அதனை வெற்றிகொள்ளவே நாம் மிகவும் சத்தமிட்டு பேசுகிறோம்”.
நீதி : நாம் விவாதிக்கும் போது நமது மனதின் தொலைவினை அதிகப்படுத்தாமல், கடுஞ்சொற்களால் அத்தொலைவினை அதிகப்படுத்தாமல் இருக்கவேண்டும், இல்லையெனில் ஒருநாள் அந்த தொலைவு மிகவும் அதிகமாகி நாம் திரும்ப வருவதற்கான வழி தெரியாமல் தவிக்க வேண்டியிருக்கும்.
அவரது சிஷ்யர்கள் சிறிது நேரம் ஆலோசனை செய்தனர். அவர்களில் ஒருவன் சொன்னான் “ஏனென்றால் நாம் அமைதியை இழந்து விடுவதால் சத்தமிடுகிறோம்”.
“ஆனால், அடுத்தவர் நமது மிக அருகில் இருக்கும் போது, நாம் ஏன் மிகவும் சத்தமிடவேண்டும்? அவர்களிடம் மிகவும் மென்மையாக பேச முடியாதா? நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்? ” என்று திரும்பவும் கேட்டார்.
அவரது சிஷ்யர்கள் கொடுத்த விடைகளால் அவரை திருப்திபடுத்த இயலவில்லை.
கடைசியாக அவர் சொன்னார் “ஒருவர் மேல் ஒருவர் கோபமாக இருக்கும்போது அவர்களது இருதயத்தின் (மனது) தூரமும் அதிகமாக இருக்கும். அதனை வெற்றிகொள்ளவே நாம் மிகவும் சத்தமிட்டு பேசுகிறோம்”.
நீதி : நாம் விவாதிக்கும் போது நமது மனதின் தொலைவினை அதிகப்படுத்தாமல், கடுஞ்சொற்களால் அத்தொலைவினை அதிகப்படுத்தாமல் இருக்கவேண்டும், இல்லையெனில் ஒருநாள் அந்த தொலைவு மிகவும் அதிகமாகி நாம் திரும்ப வருவதற்கான வழி தெரியாமல் தவிக்க வேண்டியிருக்கும்.
Saturday, March 7, 2009
மொக்கைச்சாமி
மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி வரம் வேணும்னு தவம் இருந்தானாம். கடவுள் கேட்டாராம், இவன் சொன்னானாம்....
"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".
"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.
ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...
இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"
பாவம்... அவனுக்கு 'சா' வே வரல!
"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".
"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.
ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...
இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"
பாவம்... அவனுக்கு 'சா' வே வரல!
Monday, February 23, 2009
எங்கள் ஏற்காடு பயணம் ( 21.பிப்ரவரி.2009 ) – நடந்தது என்ன ?
எங்கள் அலுவலகத்திலிருந்து நாங்கள் அனைவரும் ஏற்காடு செல்வதற்கு திட்டம் வகுத்து, அதனை 21 ஆம் தேதி செயல்படுத்துவதென முடிவெடுத்தோம். நாங்கள் மொத்தம் 19 பேர் சென்றோம். எங்கள் மொத்த டீம் :
1. திரு. உதய் - எங்க தல
2. திருமதி. சவிதா – எங்க தலையோட பாதி
3. பேபி. சுருதி – தலயோட முதல் பொண்ணு
4. பேபி. சம்ருதி – தலயோட ரெண்டாவது பொண்ணு
5. திரு. ஜெயந்தா சௌத்திரி - இவர் எங்க சென்னை டீம் தல
6. திரு. சுதர்சன் - இவர் எங்க புராடக்டுக்கே தல (மெய்ன் ஒர்க் பஞ்சர் ஒட்ரது)
7. திரு. கிஷோர் - இவரு எங்க டோட்டல் போகஸ்க்கே தல
8. திரு. பிரபு - இவருதான் எங்க புராடக்டுக்கு புது துணி கரெக்டா செட் ஆகுதானு பாக்ரவரு (R&D)
9. திரு. கோபி - இவரு ரோல் எங்களுக்கு தண்ணி காட்ற ரோல் – குவாலிட்டி கண்ட்ரேல்
10. திரு. கிருஷ்ணன் - இவருக்கும் “தண்ணி” காட்ற வேலை தான்.
11. திரு. துரைபாபு - இவரு நம்ம கிஷோருக்கு ரைட்ஹேண்டு
12. திரு. சுதர்சணம் - இவரு எங்க தருமபுரி டீம்க்கு பெரிய சீனியர் - வழிகாட்டி கைகாட்டி என்னவானாலும் வைச்சுக்கலாம்
13. அப்பால நான் - திரு. ஜான் கிறிஸ்டோhர் - நம்ம வேலை இப்பதைக்கு ஸ்பானிஷ்கு பஞ்சர் ஒட்றது.
14. திரு. கார்த்தி – ஆரக்கிளுக்கு ராசா இவரு
15. திரு. ரவிசங்கர் - நம்ம கை. புது மாப்பிள்ளை வேற.
16. திரு. வினோத் - இவரும் நம்ம கை தான்.
17. திரு. பரத் - இவரு ஜாவாவுக்கு பெருங்கை
18. திரு. சந்தோஷ் - இவரு பெரும் புராஜக்ட் பி.அஜ்.பி க்கு பெருங்கை
இம்புட்டு பேரும் 4 கார் எடுத்துகினு கிளம்புனோம். (எங்க தலையோட கார் மட்டும் தனியா சேலம் வரைக்கும் வந்துச்சு அப்பால நாங்க ஒன்னாகிட்டோம்). எங்க பிளான் காலைல 7 மணிக்கு கிளம்பறது. போட்ட பிளான்படியே கரெக்ட்டா 8 மணிக்கு (ஹி….ஹி….) கிளம்பிட்டோம்.
காலைல நம்ம வண்டிக்கெல்லாம் பெட்ரோல் டீசல் எல்லாம் போட்டுகினு மொத்த தொகைக்கும் நம்ம சுதரோட கிரெடிட்கார்ட தேய்ச்சுகினோம்.
அப்பால நேரா சேலத்துல காலை சாப்பாடு நம்ம சுதரோட (சென்னை) புண்ணியத்துல கிடைச்சுது. இந்த கேப்புல நம்ம தருமபுரி சுதர்சணத்த பிக்கப் பண்ணாம அப்டியே வந்துட்டோம். அப்பால அவரு பஸ்ஸ புடிச்சு ஹோட்டலுக்கு வந்து சேந்தாரு.
ஒரு வழியா நாங்க ஏற்காடு வந்து சேர்ந்தோம். இந்த சைக்கிள் கேப்ல நான் புக் பண்ண ஹோட்டல் பேரு, அந்த ஹோட்டல் போன் நம்பர் எல்லாம் காணோம். உடனே எங்க ஆபீஸ்ல இருக்கற எங்க மேனேஜர்கிட்ட சொல்லி இன்டெர்நெட்ல தேடி….. ஒன்னும் வேலைக்காகல. ஏற்காடு எறின உடனே, எங்க தலையோட லேப்டாப்ல நானே குதிச்சு நீந்தி ஒரு வழியா ஒரு 5 ஹோட்டல் பேர தேர்ந்தெடுத்து அதுல இருந்து நாங்க புக் பண்ண ஹோட்டல கண்டுபிடிச்சோம். ( அப்பாடா……….)
அதுக்கு பின்னால நாங்க லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட், ரோஸ்கார்டன்னு ஒரே சுத்துதான். அந்த ரோஸ் கார்டன்ல எங்க சுதர் கிங்காங் மாதிரி தொங்கினே ஒரு போஸ் குடுத்தாரு பாருங்க… நானே கிங்காங் பார்ட்-3 எடுக்கறாங்களோனு நினைச்சேன். - இதுல அவருக்குபின்னாடியே ஒரு குட்டி குரங்கு வேற (இத வேறயாரும் இல்ல நம்ம துரைபாபு தான்).
ஒரு வழியா நாங்க இந்த இடத்தையெல்லாம் பாத்துட்டு நாங்க புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு போய், அந்த வீட்டை பார்த்தோம். இங்க தான் சனி எங்களை கொஞ்சமா முறைச்சிருக்கான். நாங்க சுவாரஸ்யத்துல கவனிக்காம மதிய சாப்பாடுக்கு அதே ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிட்டோம்….(இது நடந்தது ஒரு 2:30 மணியளவில் இருக்கும்). அப்பால நாங்க பக்கோடா பயிண்ட் பாக்க போய்ட்டு ஒரு 3:45 மணிவாக்குல அந்த ஹோட்டலுக்கு வந்தா…. அந்த கொடுமையை என் பிளாக்கால எப்படிங்க சொல்றது, இன்னுமே சாப்பாடு ரெடியாகலயாம். நாங்க வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், அதான் சொல்றேனே நாங்க வெயிட் பண்ணோம்… திரும்ப திரும்ப வெயிட் பண்ணோம்…. அடடா அப்டியேதாங்க நாங்க எல்லாருமே வெயிட் பண்ணோம். ஒரு வழியா 5 மணிக்கு எல்லாருக்கும் சாப்பாடு ரெடியாகி சாப்பிட்டு முடிச்சோம். இந்த முறை எங்க சென்னை தல ஜெயந்தா தான் ட்ரீட்.
அதுக்கு பிறகு என்ன…. நாங்க எற்காடு லேக்குக்கு வந்து ஒரு போட்டிங் போய்ட்டு முடிச்சு டைம் பாத்தா 6:30. அப்பால எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வுட்டோம் ஒரு ஜீட்….. நேரா தருமபுரி வந்தப்போ டைம் சரியா 8:45. அங்க ஒரு 10 பேர் தங்கிட்டு அடுத்த நாள் கிளம்பி தருமபுரி வழியா சென்னைக்கு போனார்கள்…..
இதாங்க நடந்தது…………….
ஏற்காடு டூர் வந்த எங்க டீம் மெம்பர்ஸ் :
இது எங்க செக்ட்ரானிக்ஸ் டீம்:

இது எங்க தருமபுரி டீம்:

இது எங்க ஸ்பானிஷ் டீம்:
1. திரு. உதய் - எங்க தல
2. திருமதி. சவிதா – எங்க தலையோட பாதி
3. பேபி. சுருதி – தலயோட முதல் பொண்ணு
4. பேபி. சம்ருதி – தலயோட ரெண்டாவது பொண்ணு
5. திரு. ஜெயந்தா சௌத்திரி - இவர் எங்க சென்னை டீம் தல
6. திரு. சுதர்சன் - இவர் எங்க புராடக்டுக்கே தல (மெய்ன் ஒர்க் பஞ்சர் ஒட்ரது)
7. திரு. கிஷோர் - இவரு எங்க டோட்டல் போகஸ்க்கே தல
8. திரு. பிரபு - இவருதான் எங்க புராடக்டுக்கு புது துணி கரெக்டா செட் ஆகுதானு பாக்ரவரு (R&D)
9. திரு. கோபி - இவரு ரோல் எங்களுக்கு தண்ணி காட்ற ரோல் – குவாலிட்டி கண்ட்ரேல்
10. திரு. கிருஷ்ணன் - இவருக்கும் “தண்ணி” காட்ற வேலை தான்.
11. திரு. துரைபாபு - இவரு நம்ம கிஷோருக்கு ரைட்ஹேண்டு
12. திரு. சுதர்சணம் - இவரு எங்க தருமபுரி டீம்க்கு பெரிய சீனியர் - வழிகாட்டி கைகாட்டி என்னவானாலும் வைச்சுக்கலாம்
13. அப்பால நான் - திரு. ஜான் கிறிஸ்டோhர் - நம்ம வேலை இப்பதைக்கு ஸ்பானிஷ்கு பஞ்சர் ஒட்றது.
14. திரு. கார்த்தி – ஆரக்கிளுக்கு ராசா இவரு
15. திரு. ரவிசங்கர் - நம்ம கை. புது மாப்பிள்ளை வேற.
16. திரு. வினோத் - இவரும் நம்ம கை தான்.
17. திரு. பரத் - இவரு ஜாவாவுக்கு பெருங்கை
18. திரு. சந்தோஷ் - இவரு பெரும் புராஜக்ட் பி.அஜ்.பி க்கு பெருங்கை
இம்புட்டு பேரும் 4 கார் எடுத்துகினு கிளம்புனோம். (எங்க தலையோட கார் மட்டும் தனியா சேலம் வரைக்கும் வந்துச்சு அப்பால நாங்க ஒன்னாகிட்டோம்). எங்க பிளான் காலைல 7 மணிக்கு கிளம்பறது. போட்ட பிளான்படியே கரெக்ட்டா 8 மணிக்கு (ஹி….ஹி….) கிளம்பிட்டோம்.
காலைல நம்ம வண்டிக்கெல்லாம் பெட்ரோல் டீசல் எல்லாம் போட்டுகினு மொத்த தொகைக்கும் நம்ம சுதரோட கிரெடிட்கார்ட தேய்ச்சுகினோம்.
அப்பால நேரா சேலத்துல காலை சாப்பாடு நம்ம சுதரோட (சென்னை) புண்ணியத்துல கிடைச்சுது. இந்த கேப்புல நம்ம தருமபுரி சுதர்சணத்த பிக்கப் பண்ணாம அப்டியே வந்துட்டோம். அப்பால அவரு பஸ்ஸ புடிச்சு ஹோட்டலுக்கு வந்து சேந்தாரு.
ஒரு வழியா நாங்க ஏற்காடு வந்து சேர்ந்தோம். இந்த சைக்கிள் கேப்ல நான் புக் பண்ண ஹோட்டல் பேரு, அந்த ஹோட்டல் போன் நம்பர் எல்லாம் காணோம். உடனே எங்க ஆபீஸ்ல இருக்கற எங்க மேனேஜர்கிட்ட சொல்லி இன்டெர்நெட்ல தேடி….. ஒன்னும் வேலைக்காகல. ஏற்காடு எறின உடனே, எங்க தலையோட லேப்டாப்ல நானே குதிச்சு நீந்தி ஒரு வழியா ஒரு 5 ஹோட்டல் பேர தேர்ந்தெடுத்து அதுல இருந்து நாங்க புக் பண்ண ஹோட்டல கண்டுபிடிச்சோம். ( அப்பாடா……….)
அதுக்கு பின்னால நாங்க லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட், ரோஸ்கார்டன்னு ஒரே சுத்துதான். அந்த ரோஸ் கார்டன்ல எங்க சுதர் கிங்காங் மாதிரி தொங்கினே ஒரு போஸ் குடுத்தாரு பாருங்க… நானே கிங்காங் பார்ட்-3 எடுக்கறாங்களோனு நினைச்சேன். - இதுல அவருக்குபின்னாடியே ஒரு குட்டி குரங்கு வேற (இத வேறயாரும் இல்ல நம்ம துரைபாபு தான்).
ஒரு வழியா நாங்க இந்த இடத்தையெல்லாம் பாத்துட்டு நாங்க புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு போய், அந்த வீட்டை பார்த்தோம். இங்க தான் சனி எங்களை கொஞ்சமா முறைச்சிருக்கான். நாங்க சுவாரஸ்யத்துல கவனிக்காம மதிய சாப்பாடுக்கு அதே ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிட்டோம்….(இது நடந்தது ஒரு 2:30 மணியளவில் இருக்கும்). அப்பால நாங்க பக்கோடா பயிண்ட் பாக்க போய்ட்டு ஒரு 3:45 மணிவாக்குல அந்த ஹோட்டலுக்கு வந்தா…. அந்த கொடுமையை என் பிளாக்கால எப்படிங்க சொல்றது, இன்னுமே சாப்பாடு ரெடியாகலயாம். நாங்க வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், அதான் சொல்றேனே நாங்க வெயிட் பண்ணோம்… திரும்ப திரும்ப வெயிட் பண்ணோம்…. அடடா அப்டியேதாங்க நாங்க எல்லாருமே வெயிட் பண்ணோம். ஒரு வழியா 5 மணிக்கு எல்லாருக்கும் சாப்பாடு ரெடியாகி சாப்பிட்டு முடிச்சோம். இந்த முறை எங்க சென்னை தல ஜெயந்தா தான் ட்ரீட்.
அதுக்கு பிறகு என்ன…. நாங்க எற்காடு லேக்குக்கு வந்து ஒரு போட்டிங் போய்ட்டு முடிச்சு டைம் பாத்தா 6:30. அப்பால எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வுட்டோம் ஒரு ஜீட்….. நேரா தருமபுரி வந்தப்போ டைம் சரியா 8:45. அங்க ஒரு 10 பேர் தங்கிட்டு அடுத்த நாள் கிளம்பி தருமபுரி வழியா சென்னைக்கு போனார்கள்…..
இதாங்க நடந்தது…………….
ஏற்காடு டூர் வந்த எங்க டீம் மெம்பர்ஸ் :
இது எங்க செக்ட்ரானிக்ஸ் டீம்:

இது எங்க தருமபுரி டீம்:

இது எங்க ஸ்பானிஷ் டீம்:
Friday, February 20, 2009
இனிப்புத் திருடன்
Subscribe to:
Posts (Atom)
புறம்போக்கு
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...
-
நீ போகும் இடமெல்லாம் பாடல் வரி :Dr.Rev.Ezekiel George. Music : Suresh George. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே ந...
-
சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய ம...
-
*தமிழ் அறிவோம்..!* ------------------- *ண ன ந* எங்கெல்லாம் வரும் ? மூனுசுழி *“ண”*, ரெண்டுசுழி *“ன” "ந"* என்ன வித்தியாசம்? ப...