இலக்கணம் - எத்தனை வகைகள்:-
🌷இலக்கணம்- 5
🌷முதலெழுத்துகள் - 30
🌷சார்பெழுத்துகள் - 10
🌷சுட்டெழுத்துகள் - 3
🌷இலக்கண வகை சொற்கள் - 4
🌷பெயர்ச் சொற்கள் - 6
🌷வேற்றுமை உருபுகள் - 8
🌷போலிகள் - 3
🌷இடம் - 3
🌷நிலம் - 5
🌷சுவை - 6
🌷மெய்ப்பாடுகள் - 8
🌷பதம் - 2
🌷பகாபதம் - 4
🌷பகுபதம் - 6
🌷உறுதிப்பொருள்கள் - 4
🌷தொகை நிலைத்தொடர்கள் - 6
🌷தொகா நிலைத்தொடர்கள் - 9
🌷பருவங்கள் (மலர்) - 7
🌷புணர்ச்சி - 2
🌷விகாரப் புணர்ச்சி - 3
🌷செய்யுள் உறுப்புகள் - 6
🌷பா வகைகள் - 4
🌷அசை - 2
🌷அளபடை - 2
🌷உயிரளபெடை - 3
🌷ஆகுபெயர் - 16
🌷வழாநிலை - 6
🌷வழுநிலை - 7
🌷பொருள்கோள் - 8
🌷தளை - 7
🌷அடி - 5
🌷தொடை - 8
🌷மோனை - 7
🌷மொழிகள் - 3
🌷வினா - 6
🌷விடை - 8
🌷புறத்திணைகள் - 12
எனது புலம்பல், அலம்பல், நக்கல்,கிண்டல் மற்றும் அடுத்வனோட வயித்தெரிச்சல் எல்லாம்......
Friday, November 4, 2016
இலக்கணம் - எத்தனை வகைகள் !!!
Thursday, October 20, 2016
பரம்பரை
நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை = பரம்பரை
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக,
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை
முறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..
🍁 காலை வணக்கம் 🍁
Thursday, September 8, 2016
தமிழ் - ண/ன/ந மற்றும் ற/ர
*தமிழ் அறிவோம்..!*
-------------------
*ண ன ந*
எங்கெல்லாம் வரும் ?
மூனுசுழி *“ண”*,
ரெண்டுசுழி *“ன” "ந"*
என்ன வித்தியாசம்?
படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்தவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்..
_கண்ணப்பன்_ னு எழுதச்சொன்னா, ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பா-னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்:
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்...
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?" ன்னு...
தமிழ் எழுத்துகளில் -
*ரெண்டுசுழி *ன*
என்பதும் தவறு!
*மூனுசுழி ண*
என்பதும் தவறு!
*ண* -
இதன் பெயர் _*டண்ணகரம்;*_
*ன* -
இதன் பெயர் _*றன்னகரம்;*_
*ந* -
இதன் பெயர் _*தந்நகரம்*_
என்பதே சரி.
_*மண்டபம், கொண்டாட்டம்*_
– என எங்கெல்லாம் இந்த மூனு சுழி *ண*கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து *'ட'* வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு _*"டண்ணகரம்"*_ னு பேரு.
(சொல்லிப் பாருங்களேன்?)
_*தென்றல், சென்றான்*_
– என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி *ன*கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து *'ற'* வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு _*"றன்னகரம்"*_ னு பேரு.
(சும்மா சொல்லிப்பாருங்க?)
_*இது ரெண்டும் என்றுமே மாறி வராது..*_
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம, இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)
வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
('வர்க்க எழுத்து'-ன்னா,
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)
இந்தப் பெயரோடு
(டண்ணகரம்,
றன்னகரம்,
தந்நகரம்)
இந்த *ண, ன, ந* எழுத்துகளைப் பற்றி அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.
எப்புடீ?
_*மண்டபமா? மன்டபமா?*_
சந்தேகம் வந்தா...
பக்கத்துல *'ட'* இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி *'ண்'*
தான் வரும்.
ஏன்னா அது _*"டண்ணகரம்".*_
*_கொன்றானா? கொண்றானா?_*
சந்தேகம் வந்தா...
பக்கத்துல *'ற'* இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி *'ன்'*
தான் வரும்.
ஏன்னா அது _*"றன்னகரம்"*_
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான்
*'ந'* கரம் என்பதை,
*"தந்நகரம்"* னு
சொல்லணும்..
ஏன்னா இந்த *'ந்'* எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் *'த'* மட்டுமே.
_*(பந்து, வெந்தயம், மந்தை)*_
இன்று முழுமையாக தெரிந்து தெளிந்து நீங்களும் தெரிந்து கொள்ளவே இப்பதிவு.
எமக்கு புரிந்தது பகிர்ந்தோம் .!
உங்களுக்கும் புரிந்தால் பகிரலாமே .!
மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டுமே..!!!
நன்றி
புறம்போக்கு
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...
-
நீ போகும் இடமெல்லாம் பாடல் வரி :Dr.Rev.Ezekiel George. Music : Suresh George. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே ந...
-
சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய ம...
-
ஒரு புனிதர் அவரது சிஷ்யர்களிடம் கேட்டார் “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்?”, “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்...