Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Thursday, June 28, 2012

நெஞ்சே நீ கலங்குவதேனோ!!!!



நெஞ்சே நீ கலங்குவதேனோ

நெஞ்சே நீ கலங்குவதேனோ
நெஞ்சே நீ தவிப்பதும் ஏனோ
ஒருதரம் கூட உன்சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை - 2

தளர்ந்திடும் போது தாங்கிடும் தூயவர்
தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போதில் காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார் - 2
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்லபாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பனிந்திடுவோம்


பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவாராக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலமெல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார்
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்லபாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பனிந்திடுவோம்

Wednesday, January 23, 2008

உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ


உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய்
எண்ணில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே எண் கண்ணே
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ

கண்ணே உயிராய் தொழுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்

விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனமுருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்

உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய்
எண்ணில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே எண் கண்ணே


நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்

விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனமுருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்

உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே

Thursday, July 26, 2007

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்


அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஒரு அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பாரத்து தினம் உன் தலை கோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்


நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில்
மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான்
பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் சீண்டலில் என் தேகத்தை புது
ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...